கல்லூரி மாணவியர் விடுதி திறப்பு
பழங்குடி வகுப்பினருக்கான புதிய கல்லூரி மாணவியர் விடுதியை தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM
பழங்குடி வகுப்பினருக்கான புதிய கல்லூரி மாணவியர் விடுதியை தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.சுப்ரமணியன் சென்னை ராயபுரத்தில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
2012-13 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் வெளியூர்களில் இருந்து வந்து கல்லூரிகளில் படிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்காக 25 விடுதிகள் தமிழகத்தில் தொடங்க ஆணையிட்டது. அதில் முதல் கட்டமாக சென்னை ராயபுரத்தில் பழங்குடியினருக்காக ஒரு புதிய கல்லூரி மாணவியர் விடுதியை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்ரமணியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.