பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்கும் "நம்பிக்கைத் திட்டம்'
தொலைபேசி மற்றும் அகண்ட அலைவரிசை திட்டத்தை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளரகளுக்கு சலுகை அளிக்கும்
தொலைபேசி மற்றும் அகண்ட அலைவரிசை திட்டத்தை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளரகளுக்கு சலுகை அளிக்கும் "நம்பிக்கைத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி, மாதம் ரூ.400 கட்டண அளவுக்கு அதிகமாகவும், இரு மாதத்துக்கு ரூ.800 கட்டணத்துக்கு அதிகமாகவும் தொலைபேசி (லேண்ட் லைன்) மற்றும் அகண்ட அலைவரிசை (பிராட் பேண்ட்) திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைப் புள்ளி அளிக்கப்படும்.
இந்தப் புள்ளிகளைப் பெற ஆரம்பித்து, 6 மாதத்துக்குப் பின்னர் சலுகையை வாடிக்கையாளர் அனுபவிக்க முடியும். அதாவது ஒரு புள்ளிக்கு ஒரு அழைப்பு (இணைய அழைப்புகளுக்கு மட்டும்) இலவசமாக அளிக்கப்படும்.
Advertisement
Advertisement
வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 25 புள்ளிகளை அல்லது அதிகபட்சம் 500 புள்ளிகளைப் பெற்ற பிறகு, வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு நேரடியாகச் சென்றோ அல்லது 1500 என்ற எண்ணைத் தொடர்புகொண்டோ புள்ளிகளை சமர்ப்பித்து சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது, ஆன்-லைன் மூலம் பதிவு செய்தும் சலுகையைப் பெறலாம் என பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.