முகப்பு
சென்னை

இந்திய தேசிய லீக் கட்சியுடன் தேசிய லீக் இணைந்தது

தமிழக அளவில் செயல்பட்டு வந்த தேசிய லீக் கட்சி, அகில இந்திய கட்சியான இந்திய தேசிய லீக் உடன் இணைந்தது.

Updated On : 22 ஜூன் 2013, 4:24 am IST
பகிர்:

தமிழக அளவில் செயல்பட்டு வந்த தேசிய லீக் கட்சி, அகில இந்திய கட்சியான இந்திய தேசிய லீக் உடன் இணைந்தது.

1994-ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய லீக், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இப்போது இக்கட்சியுடன் தமிழகத்தில் எம். பஷீர் அகமது தலைமையில் செயல்பட்டு வந்த தேசிய லீக் கட்சி இணைந்தது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தேசிய லீக் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சியின் தேசியத் தலைவர் முகமது சுலைமான் செய்தியாளர்களிடம் பேசியது:

Advertisement

Advertisement

முஸ்லிம் அமைப்புகளை ஓரணியில் திரட்டும் முயற்சியின் முதற்கட்டமாக தேசிய லீக் எங்களுடன் இணைந்துள்ளது.

இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக தலைவராக எம். பஷீர் அகமது செயல்படுவார்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவுக்கும், சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக மட்டும் பயன்படுத்தி ஏமாற்றி வரும் காங்கிரஸýக்கும் மாற்றாக 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் இந்திய தேசிய லீக் ஈடுபடும் என்றார் சுலைமான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.