முகப்பு
சென்னை

சென்னை வந்த விமானத்தில் ரூ.2.5 கோடி தங்கம் கடத்தல்

சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.2.5 கோடி தங்கம் கடத்தி வரப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Updated On : 22 ஜூன் 2013, 4:14 am IST
பகிர்:

சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.2.5 கோடி தங்கம் கடத்தி வரப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

கொழும்பில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொழும்பில் இருந்து சென்னை வரும் விமானத்தை கண்காணித்தனர்,

மத்திய வருவாய் புலனாய்வுப் அதிகாரிகள் சோதனை செய்வதை அறிந்த கடத்தல் கும்பல் தங்கள் திட்டத்தை மாற்றி கொழும்பில் இருந்து தில்லி சென்றனர். பின்னர் தில்லியில் இருந்து விமானம் மூலம் 5 பேர் கொண்ட கும்பல் சென்னை வந்தனர்.

Advertisement

Advertisement

இவர்கள் மீது மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் கொண்டுவந்த சூட்கேûஸ சோதனை செய்தபோது, அதில் 10 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடி.

இதையடுத்து தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த ஜெய்கேந்திரன், முகமது இஸ்மாயில், நிஷார், முகமது சையது, தில்லியைச் சேர்ந்த நீனாவர்மா ஆகிய 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.