11-ஆவது மாடியில் இருந்து விழுந்தவர் சாவு
சென்னை செம்பரம்பாக்கம் அருகே 11-ஆவது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
சென்னை செம்பரம்பாக்கம் அருகே 11-ஆவது மாடியில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
செம்பரம்பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் 18 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்டடத்தின் 11-ஆவது மாடியில் கட்டட சாரம் கட்டும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement
அப்போது திடீரென அந்த சாரம் சரிந்து விழுந்தது. இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி நவீன் கொண்ட்ரா (23), 11-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து நசரேத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.