முகப்பு
சென்னை

இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருதுக்கு பாம்பே ஜெயஸ்ரீ தேர்வு

கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இந்த ஆண்டுக்கான இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 4:05 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இந்த ஆண்டுக்கான இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறக்கட்டளை சார்பில் சென்னையில் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் இசைக் கச்சேரியையும் அவர் வழங்குவார்.

சிறந்த இசைக் கச்சேரிகளை வழங்கியதற்காகவும், பாரம்பரிய இசை வடிவத்துடனேயே பாடுவதற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையிலுள்ள மியூசிக் அகாதெமியில் விருது வழங்கும் விழா, இசைக் கச்சேரி ஆகியவை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் என இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் மல்லிகா ஸ்ரீனிவாசன், மியூசிக் அகாதெமியின் தலைவர் என். முரளி ஆகியோர் தெரிவித்தனர். அமால்கமேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.சிவசைலத்தின் மனைவி இந்திரா சிவசைலம் நினைவாக இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.