இரு அஞ்சல் அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று
சென்னையில் உள்ள அண்ணா சாலை மற்றும் மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா சாலை மற்றும் மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது.
இரு அஞ்சல் அலுவலகங்களுக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பு (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ்) வழங்கியுள்ள ஐ.எஸ் 15700:2005 என்ற தரச் சான்றிதழ், அடுத்த 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இது குறித்து அஞ்சல்துறைத் தலைவர் (சென்னை) வெளியிட்ட செய்தி: அண்ணா சாலை மற்றும் மயிலாப்பூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களின் விரைவு அஞ்சல், எக்ஸ்பிரஸ் பார்சல், சேமிப்புத் திட்டங்கள், மணி ஆர்டர் சேவை, பார்சல்கள் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளின் தரம் சிறப்பாக உள்ளன.
அதன் அடிப்படையில் இரு அஞ்சல் அலுவலகங்களுக்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Advertisement