முகப்பு
சென்னை

சாலை விபத்து: டெய்லர் சாவு

சென்னை அம்பத்தூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டெய்லர் இறந்தார்.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 3:50 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

சென்னை அம்பத்தூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டெய்லர் இறந்தார்.

அம்பத்தூர் இந்திரா நகர் காமராஜர் தெருவில் வசித்தவர் சுப்பிரமணி (40). தையல் தொழிலாளியான இவர் அண்ணா நகரில் துணி தைத்து கொடுத்து வந்தார்.

வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

Advertisement

பாடி மேம்பாலம் இறக்கத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி தடுப்புச் சுவரின் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.