சென்னையில் துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற ஊதியம் வழங்கவேண்டும் என்று துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற ஊதியம் வழங்கவேண்டும் என்று துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் சென்னை மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் கட்டட வளாகத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.
இதில் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
Advertisement
அப்போது, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் என்.எம்.ஆர்., தாற்காலிக, தொகுப்பூதிய தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குடியிருப்பு வசதி, தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டையை வழங்க வேண்டும்; பழைய மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போன்ற ஊதியத்தை விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.