நாகர்கோவில்- மங்களூருக்கு சிறப்பு ரயில்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு காத்திருப்போர் பட்டியலில் அதிக பயணிகள் இருப்பதால் நாகர்கோவில் - மங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு காத்திருப்போர் பட்டியலில் அதிக பயணிகள் இருப்பதால் நாகர்கோவில் - மங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 06306: நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 13-ஆம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு மங்களூர் சென்றடையும்.
Advertisement
ரயில் எண் 06305: மறுமார்க்கத்தில் மங்களூரில் இருந்து செப்டம்பர் 14-ஆம் தேதி பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.45 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலின் முன்பதிவு வியாழக்கிழமை முதல் தொடங்கும்.