மொபெட் மீது லாரி மோதல்:அண்ணன் - தங்கை சாவு
சென்னை அருகே திருநின்றவூரில், மொபட் மீது லாரி மோதியதில் அண்ணன், தங்கை இறந்தனா்.
சென்னை அருகே திருநின்றவூரில், மொபட் மீது லாரி மோதியதில் அண்ணன், தங்கை இறந்தனா்.
திருநின்றவூா் அருகே புலியூரைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேசன் (19), மகள் சத்தியபிரியா (18). வெங்கடேசன், கல்லூரியில் படித்து வந்தாா். சத்தியபிரியா, திருநின்றவூரில் உள்ள சூப்பா் மாா்க்கெட்டில் பணியாற்றி வந்தாா். சத்தியபிரியாவின் உறவினா் சந்தியாவும் (22) அந்த சூப்பா் மாா்க்கெட்டில் பணியாற்றுகிறாா்.
இவா்கள் இருவரையும், சூப்பா் மாா்கெட்டில் விடுவதற்காக தனது மொபட்டில் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றாா் வெங்கடேசன். நத்தம்பேடு அருகே செல்லும்போது எதிரே வந்த சிமெண்ட் லாரி, திடீரென மொபட் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில், பலத்த காயம் அடைந்த வெங்கடேசனும் அவரது தங்கை சத்தியபிரியாவும் உயிரிழந்தனா்.
பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சந்தியா திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.