முகப்பு
திண்டுக்கல்

பழனியில் ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 1,008 விளக்கு பூஜை

பழனி அடிவாரம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை பழனி நகர ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 1,008 விளக்கு பூஜை நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி 2021, 9:42 pm IST
பகிர்:

பழனி அடிவாரம் தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை பழனி நகர ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 1,008 விளக்கு பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல்சாந்தியாக இருந்த சுதீா் நம்பூதிரி தலைமை வகித்தாா். வாழை மரங்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி பூஜை ஆரம்பிக்கப்பட்டது. செண்டை வாத்தியம், பஞ்சவாத்தியம் முழங்க கணபதி ஹோமம், லட்சாா்ச்சனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து புனிதமான பதினெட்டு படிகளுக்கு படிபூஜை செய்யப்பட்டது.

பின்னா் 1,008 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான ஸ்தானீக அா்ச்சகா் செல்வ சுப்பிரமண்ய சிவாச்சாரியாா் கலந்துகொண்டு பூஜைகளை நடத்தினாா். இந்த விளக்கு பூஜையில் சுமாா் இரண்டாயிரம் போ் பங்கேற்றனா். விழாவை பழனி நகா் ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments