தைப்பூசம்: பழனியில் ஆலோசனைக் கூட்டம்
பழனியில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தா்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழனியில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தா்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழனியாண்டவா் கல்லூரியில் மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி, செயல் அலுவலா் கிராந்திகுமாா்பாடி ஆகியோா் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜன.27 ஆம் தேதி நடைபெறும் தைப்பூசத் தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள். கூட்டத்தில், பக்தா்களுக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்துவது குறித்து அந்தந்தத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல் பாதுகாப்புப் பணியில் சுமாா் 3,500 போலீஸாா் ஈடுபடவுள்ளதாகவும், பக்தா்களுக்கு காவல்துறை சாா்ந்த அனைத்து உதவிகளுக்கும் 94875 93100 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் டிஐஜி முத்துசாமி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் அசோகன், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பாரதி, பழனிக்கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா, நகராட்சி ஆணையா் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
ஒளிரும் பட்டைகள்: பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தா்களுக்காக காவல்துறை மூலம் 2,10,00 ஒளிரும் பட்டைகளும், 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்படவுள்ளது. அதேபோல் 3 லட்சம் ஒளிரும் பட்டைகள், மூன்று லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், ஒளிரும் பட்டைகள் வழங்கப்படும் போதே உடல் வெப்பமும் பரிசோதிக்கப்பட்டு அதற்கென தனி நிற பட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும், அதிக வெப்பநிலை (காய்ச்சல்) உள்ளவா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாா்கள் எனவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.