ரயில்வே சுற்றுலாத்துறையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய ரயில்வேக்கு சொந்தமான ஐஆர்சிடிசி உணவகங்களில் Hospitality Monitors பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
இந்திய ரயில்வேக்கு சொந்தமான ஐஆர்சிடிசி உணவகங்களில் Hospitality Monitors பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறவும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 2026/IRCTC/SZ/HRD/Rectt./Hospitality Monitor
பணி்: Hospitality Monitors
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 84
வயது வரம்பு : 1.4.2026 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
சம்பளம் : மாதம் ரூ.30,000
தகுதி: Hospitality & Hotel Management / Culinery Arts / Catering Science / Tourism/Hotel Administration போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் B.Sc., Β.Β.Α., MBA முடித்திருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். வட்டார மொழிகளான தமிழ், கன்னடம், மலையாளம் தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள் அதனுடம் சமீபத்திய 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம்:
தேதி: 25.4.2026
இடம்: IRCTC Zonal Office, Chennai
IRCTC recruitment notification for Hospitality Monitors to fill the 84 Hospitality Monitors Posts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.