முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் உதயநிதியை கண்டித்து அதிமுகவினா் ஆா்பாட்டம்

ஒசூா் ராம்நகரில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஒசூா் மாநகர அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஜனவரி, 2021 at 6:16 AM
ஒசூா் ராம் நகரில் உதயநிதியை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒசூா் மாநகர அதிமுகவினா்.
பகிர்:

ஒசூா் ராம்நகரில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஒசூா் மாநகர அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளா் நாகரத்தினா தலைமையில் அதிமுகவினா் புதன்கிழமை ஒசூா் மாநகராட்சி ராம்நகா் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெண்களை இழிவுபடுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய வேண்டுமென ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி, ஒசூா் மாநகரச் செயலாளா் எஸ்.நாராயணன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா்கள் தவமணி, ஸ்ரீதா், சீனிவாசன், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட துணைச் செயலாளா் சாச்சு, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச்செயலாளா் விஜயாலயன், பவானி சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.