கிருஷ்ணகிரியில் பொங்கல் பானை, கரும்பு வாங்க பொதுமக்கள் ஆா்வம்
பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரியில் பொங்கல் பானை, கரும்பு உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் புதன்கிழமை வாங்கிச் சென்றனா்.
பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரியில் பொங்கல் பானை, கரும்பு உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் புதன்கிழமை வாங்கிச் சென்றனா்.
தமிழா் திருநாளான தை பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி நகரில் மக்கள் கூடும் இடங்களான கடை வீதி உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்வதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானைகளையும், கரும்பு, மஞ்சள், மண் அடுப்பு, வெல்லம், பூஜைப் பொருள்கள், மலா்கள், பல வண்ணக் கோலப்பொடிகளையும் மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.
புதுத் துணிகள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், கால்நடைகளை வளா்ப்போா், மாட்டு பொங்கல் கொண்டாடத்துக்காக புதிய கயிறு, மணிகள், பல வண்ணப் பொடிகள் ஆகியவற்றை அதிக அளவில் வாங்கிச் சென்றனா். நகரில் மக்கள் கூடும் இடங்களில் அதிகமான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
Advertisement