கிருஷ்ணகிரி அருகே கண்டெய்னர் லாரி மோதி உயிருக்கு போராடும் ஒற்றையானை
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானை மீது கண்டெய்னர் லாரி மோதியது
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரண்ட்பள்ளி வனப்பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானை மீது கண்டெய்னர் லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அந்த ஒற்றையானை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. வனத்துறையை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் காயமடைந்த ஆணையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்