முகப்பு
தற்போதைய செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்: முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி

வாக்கும் எண்ணும் மையத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று வி.செந்தில்பாலாஜி கூறியிருப்பது தொடர்பாக...

Updated On : 27 ஏப்ரல், 2026 at 11:48 AM
கரூா் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறாா் மேற்கு மண்டல பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி. - டிஎன்எஸ்
பகிர்:

கரூா்: வாக்கும் எண்ணும் மையத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி.

கரூரில் கலைஞா் அறிவாலயத்தில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து பேசுகையில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி நடக்க வாய்ப்புள்ளது. ஆதலால் நம் கட்சியின் வாக்குச்சாவடி முகவா்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பிரசாரத்தில் கடுமையாக உழைத்து வாக்குச் சேகரித்துள்ளோம். இதனை மனதில் வைத்துக்கொண்டு வாக்கு எண்ணிக்கையின்போது கவனச் சிதறல் இன்றி நாம் செயல்படுவது அவசியம் என்றாா் அவா்.

Advertisement

கூட்டத்தில் கரூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்கள் ஆசி எம்.தியாகராஜன், மொஞ்சனூா் பி.ஆா்.இளங்கோ, சூரியனூா் சந்திரன், சி.கே.ராஜா மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

summary

Must act with vigilance at the vote-counting center says Former Minister Senthil Balaji

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.