முகப்பு
நூல் அரங்கம்

ஹோமோ டியஸ் - வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

ஹோமோ டியஸ் - வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி; தமிழில்:  நாகலட்சுமி சண்முகம்;  பக்.494; ரூ.499;  மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2 ஆவது தளம், உஷா ப்ரீட் காம்ப்ளக்ஸ்,  42, மால்வியா நகர

Updated On : 27 மே 2019, 12:40 am IST
பகிர்:

ஹோமோ டியஸ் - வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி; தமிழில்:  நாகலட்சுமி சண்முகம்;  பக்.494; ரூ.499;  மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2 ஆவது தளம், உஷா ப்ரீட் காம்ப்ளக்ஸ்,  42, மால்வியா நகர், போபால்-462003.
வரலாறு என்பதே இதற்கு முன் நடந்தவற்றைப் பற்றிக் கூறுவதாகத்தான் இருக்க முடியும்.  இந்நூல் நூலின் தலைப்புக்கேற்ப, இனிமேல் நடக்கப் போகின்றவற்றைப் பற்றி பேசுகிறது.  உலகமயம், தாராளமயம் உள்ள இக்காலத்தில்,  உலகின் பழைய  கலாசாரம், மதம்,  சிந்தனை ஆகியவை அதற்கேற்ப மாற வேண்டியதன் தேவையை இந்நூல்  வலியுறுத்துகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அதனால் மாறி வருகிற வாழ்க்கைமுறை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றி வளர்ந்த சிந்தனைகளுக்குப் பொருத்தமாக இருக்க முடியாது என்று கூறுகிறது.    
அதற்கு உலகில் தற்போது நடப்பிலுள்ள பலவற்றை ஆராய்கிறது. 
"விவசாயிகள் கோதுமையை வளர்ப்பது, தொழிலாளர்கள் ஆடைகளைத் தயாரிப்பது, வாடிக்கையாளர்கள் ரொட்டிகளையும் மேலாடைகளையும் வாங்குவது ஆகியவற்றை உள்ளடக்கியதுதான்  பொருளாதாரம் என்று அப்பாவி மக்கள் நம்புகின்றனர்.  ஆனால் வல்லுநர்களோ,  விருப்பங்களையும் திறன்களையும் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்கும், அந்தத் தரவுகளைத் தீர்மானங்களாக மாற்றுவதற்குமான ஓர் இயக்க அமைப்பாக பொருளாதாரத்தைப் பார்க்கின்றனர்' என்று  தற்போதைய பொருளாதாரநிலையைப் பற்றிக் கூறும் நூலாசிரியர், "எனினும் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரேவிதமான சமுதாய அமைப்பையே உருவாக்கும் என்று கூற முடியாது' என்கிறார்.     மனித குலத்தின் எதிர்காலம் குறித்த சிந்தனைகளை இந்நூல் தூண்டிவிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments