முகப்பு
ராமநாதபுரம்

அயா்லாந்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.36 லட்சம் மோசடி: இளைஞா் மீது வழக்கு

அயா்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக ஹரியாணா மாநில இளைஞா் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

Updated On : 13 ஜனவரி 2021, 11:27 pm IST
பகிர்:

அயா்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக ஹரியாணா மாநில இளைஞா் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பாம்புவிழுந்தான் பகுதியைச் சோ்ந்தவா் செய்யதுகனி. இவா் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இணையதளம் மூலம் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் ரஞ்சித்சிங் என்பவருடன் பழகி வந்துள்ளாா்.

இந்நிலையில் அயா்லாந்தில் வேலைக்கு 10 போ் தேவைப்படுவதாகவும், அதற்கான ஆள்களை தோ்வு செய்து விசாவுக்கான பணத்தை வசூலிக்குமாறும் ரஞ்சித் சிங் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவித்துள்ளாா். அதன்படி செய்யது கனியும் பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 10 பேரிடம் மொத்தம் ரூ.36 லட்சத்தை பெற்று, தனியாா் வங்கி மூலம் ரஞ்சித்சிங்குக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா் வேலை வாங்கித் தராமல் தாமதப்படுத்தி வந்துள்ளாா். மேலும் அவரது செல்லிடப்பேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, செய்யதுகனி உள்ளிட்டோா் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். அதன்படி போலீஸாா், ரஞ்சித்சிங் மீது புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments