சரவணப்பொய்கையில் தெய்வானையுடன் எழுந்தருளினார் சுப்பிரமணிய சுவாமி
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி தீர்த்த உற்ஸவம் விமரிசையாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி தீர்த்த உற்ஸவம் விமரிசையாக நடைபெற்றது.
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்ச் 21-ல் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்த அருள்பாலித்தார்.
இந்நிலையில், நேற்று தீர்த்த உற்ஸவத்தையொட்டி உற்சவ சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உள்ளிட மூர்த்தங்கள் எழுந்தருளினர். தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர்.
Advertisement
Advertisement
இந்த உற்ஸவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் சரவணப்பொய்கையில் திரண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.