கெங்கையம்மன் கோயிலில் மார்கழி திருவிழா தொடக்கம்
ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் கெங்கையம்மன், எல்லையம்மன் கோயில்களின் மார்கழி திருத்தேர் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் கெங்கையம்மன், எல்லையம்மன் கோயில்களின் மார்கழி திருத்தேர் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. உற்சவருக்கு கவசம் அணிவித்தல், கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல், திருத்தேர் அலங்காரம், கலச ஊர்வலம், அம்மன் அழைப்பு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருத்தேர் வீதி உலா புதன்கிழமை (டிச.26) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கெங்கையம்மன், எல்லையம்மன் கோயில் திருப்பணிக் குழுவினர் செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.