முகப்பு
செய்திகள்

தஞ்சை பெரியகோயிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள வராகி அம்மனுக்கு 11 நாள்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா நேற்று தொடங்கியது.

Updated On : 13 ஜூலை 2018, 1:03 pm IST
பகிர்:

தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள வராகி அம்மனுக்கு 11 நாள்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி, காலையில் கணபதி ஹோமமும், சிறப்பு யாகமும் நடைபெற்றன. பின்னர், வாராஹி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 

மாலையில் வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழா நாள்களில் நாள்தோறும் காலையில் யாகமும், மாலையில் வாராஹி அம்மனுக்கு அலங்காரமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

வாராஹி அம்மனுக்கு இன்று மஞ்சள் அலங்காரமும், சனிக்கிழமை குங்கும அலங்காரமும் செய்யப்படவுள்ளது. வரும் 15-ம் தேதி சந்தன அலங்காரமும், 16-ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 17-ம் தேதி மாதுளை அலங்காரமும், 18-ம் தேதி நவதானிய அலங்காரமும், 19-ம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 20-ம் தேதி கனிவகை அலங்காரமும், 21-ம் தேதி காய்கறி அலங்காரமும், 22-ம் தேதி புஷ்ப அலங்காரமும், திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments