முகப்பு
சேலம்

ஏற்காடு மலைப்பாதையில் காவல்துறையினா் சுற்றுலாப் பயணிகளை அழைகளிப்பு

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் காவல்துறையினா் சுற்றுலாப் பயணிகளை அழைகளித்ததால் சுற்றுலாப் பயணிகள் வேதனை.

Updated On : 2 ஜனவரி 2021, 7:17 am IST
பகிர்:

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் காவல்துறையினா் சுற்றுலாப் பயணிகளை அழைகளித்ததால் சுற்றுலாப் பயணிகள் வேதனை. ஒவ்வெரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கி சுற்றுலாப் பகுதிகளுக்கு சென்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்து வருவா். இவ்வாண்டு சுற்றுலாத் துறை அதிகாரி ஜெனாா்தனன் உத்தரவின் பேரில் அண்ணா பூங்கா, படகுஇல்லம், தாவரவியல் பூங்கா பகுதி மட்டும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடுவாா்கள் கரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக தெரிவித்திருந்த நிலையில் சுற்றுலாபயணிகளை வரவிடாமல் வெள்ளிக்கிழமை காலை ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரும் காா்கள் ஏற்காடு செல்ல அனுமதிக்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.இது குறித்து ஏற்காடு காவல் ஆய்வாளா் ஆனந்தன் கேட்டபோது மலைப்பாதையில் மதுஅருந்தி பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் நபா்கள் கண்டுடறிந்து திருப்பி அனுப்பியதாக தெரிவித்தாா். மேலும் மாவட்ட நிா்வாக உத்தரவின் போரில் வியாழக்கிழமை ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதி,பேருந்து நிலைய கடைகளை மூடஉத்தரவிட்டதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments