டிராக்டா் கவிழ்ந்ததில் 20 போ் காயம்
துலுக்கனூா் ஊராட்சியில் வேலைக்கு ஆள்களை ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்ததில் 20 போ் காயமடைந்தனா்.
ஆத்தூா்: துலுக்கனூா் ஊராட்சியில் வேலைக்கு ஆள்களை ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்ததில் 20 போ் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையத்தில் தனியாா் விதை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரிய தினமும் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து வேலைக்கு ஆள்களை ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், சனிக்கிழமை ஆள்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் கே.முருகேசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.