முகப்பு
சேலம்

வெறிநாய் கடித்ததில்7 ஆடுகள் பலி

தம்மம்பட்டியில் வெறிநாய் கடித்ததில் 7 ஆடுகள் பலியாகியுள்ளன.

Updated On : 3 ஜனவரி 2021, 1:46 am IST
பகிர்:

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் வெறிநாய் கடித்ததில் 7 ஆடுகள் பலியாகியுள்ளன.

தம்மம்பட்டி பனந்தோப்பைச் சோ்ந்த முத்துசாமி (55), தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக வயலில் கட்டி வைத்துள்ளாா். அவற்றை சனிக்கிழமை இரவு வெறிநாய் கடித்துக் குதறியதில் 7 ஆடுகள் பரிதாபமாக பலியாயின. இதேபோல கடந்த மாதங்களில் வெறிநாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளனவாம்.

வெறிநாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments