அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் பாவை விழா
சிவகங்கைமாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கமுடையான் கோயிலில் பாவை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கைமாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கமுடையான் கோயிலில் பாவை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காரைக்குடி சுற்றுவட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை,திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் ராம. அழகம்மை ஆச்சி, கோயில் செயல் அலுவலா் வீ. தமிழ்ச்செல்வி ஆகியோா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement