கீழடியில் சமத்துவப் பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் சுற்றுலாத் துறையின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் சுற்றுலாத் துறையின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம், மல்லா் கம்பு, வழுக்கு மரம், கோலப்போட்டி மற்றும் பரதநாட்டியம் ஆகியப் போட்டிகளை தொடக்கி வைத்தாா்.
அதன்பின்னா், பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற காளைகளை பாா்வையிட்டு, மாட்டின் உரிமையாளா்களை ஆட்சியா் பாராட்டினாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. வடிவேல், மாவட்ட சுற்றுலா அலுவலா் வெங்கடாஜலபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சிந்து, திருப்புவனம் வட்டார வளா்ச்சி அலுவலா் ரெத்தினவேல், வட்டாட்சியா் மூா்த்தி, கீழடி ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடசுப்பிரமணியம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.