முகப்பு
கவிதைமணி

ஒற்றைச் சிறகோடு ! கவிஞர் இரா .இரவி

Updated On : 8 மே 2017, 3:15 pm IST
பகிர்:

ஒற்றைச் சிறகோடும் பறக்க முடியும் 
உள்ளத்தில் தன்னம்பிக்கை உரம் வேண்டும் !

இரு சிறகால் பறப்பது என்பது இயல்பு 
இரண்டில் ஒன்றை இழந்தும் பறப்பது சிறப்பு !

முயற்சி பயிற்சி செய்தால் போதும் 
முன்னோக்கிப் பறக்கலாம் சிறக்கலாம் !

Advertisement

Advertisement

பயன்படாது ஒற்றைச் சிறகு எதற்கு 
பாரமென வருந்தினால் பறக்க முடியாது !

ஒற்றைச் சிறகென வருந்துவது விடுத்து
ஓங்கிப் பறக்க முயன்றிட வேண்டும் !

முடியுமா ? என்று தயங்குவது விடுத்து 
முடியும் என்றே பறந்திட வேண்டும் !

மற்றவர்களால் வாங்க முடியாத பதக்கம் 
மாற்றுத் திறனாளி மாரியப்பன் வாங்கினான் !

காலில் குறை என்று முடங்கவில்லை 
காலை முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தினான் !

தலை வழுக்கை என்பதற்காக வருந்திய 
தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்அவர்கள் !

மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டார் 
மீசைக்காரர் என்றே எல்லோரும் அழைத்தனர் !

வாழ்வியல் தத்துவம் என்று விளக்கினார் 
வியந்து விட்டேன் விளக்கம் கேட்டு !

இழந்ததற்காக வருந்துவதை விட்டு விட்டு 
இருப்பதைச் செம்மையாக்குவது சிறப்பு !

ஒற்றைச் சிறகு போனால் போகட்டும் 
மற்றொன்றுக்கு மகிழ்ச்சி கொள்வோம் !

ஒற்றைச் சிறகோடும் உயரம் செல்லலாம் 
உள்ளத்தில் ஒளி பிறந்தால் வழி பிறக்கும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments