முகப்பு
விளையாட்டு

சீன குத்துச்சண்டை: வெள்ளியை உறுதி செய்தார் மன்ஜீத் சிங்

சீன ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மன்ஜீத் சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Updated On : 22 ஜூன், 2013 at 12:41 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

சீன ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மன்ஜீத் சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

சீனாவின் கியாங் நகரில் நடைபெற்று வரும் 3-வது சீன ஓபன் குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவு அரையிறுதியில் மன்ஜீத் சிங், சீனாவின் வாங் ஜி பாவை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தார். மன்ஜீத் சிங், சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் சீனாவின் அகீப்பீர் யூசுப்பை சந்திக்கிறார்.

52 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுநீல் குமார், சீனாவின் சங் யாங்கிடமும், ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஜய் குமார், சீனாவின் யூ லுன்ஹாயிடம், 75 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய்தீப், சீனாவின் ஜாவிடமும் தோல்வி கண்டனர். இதனால் அவர்கள் 3 பேருக்கும் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.