முகப்பு
விளையாட்டு

செய்திகள் சில வரிகளில்...

ஜெர்மனியின் ஸýல் நகரில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சக வீராங்கனைகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளது தேசிய ரைஃபிள் சங்கம்.

Updated On : 22 ஜூன், 2013 at 12:43 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

ஜெர்மனியின் ஸýல் நகரில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சக வீராங்கனைகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்துள்ளது தேசிய ரைஃபிள் சங்கம்.

இந்திய கேப்டன்களில் செளரவ் கங்குலி எனக்குப் பிடித்தவர். ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் அவர் இந்திய அணியை வழிநடத்திய விதம் பிரமிக்க வைத்தது என்று மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் விளையாடவுள்ள மும்பை மாஸ்டர்ஸ் அணியை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வாங்குவார் என்று தெரிகிறது. அவருடன் மேலும் 3 பேர் இந்த அணியில் பங்குதாரர்களாக இருப்பார்கள்.

Advertisement

கடந்த ஐ-லீக் சீசனின் சிறந்த வீரராக நைஜீரியாவின் ரான்டி மார்ட்டின்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரயாக் யுனைடெட் அணிக்காக விளையாடிய அவர் 27 கோல்களை அடித்தார்.

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் குறித்து விசாரணை நடத்தவுள்ள இரு ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் பெங்களூரில் சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் பிசிசிஐயின் விளையாட்டு மேம்பாட்டுக்கான பொது மேலாளர் ரத்னாகர் ஷெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.