முகப்பு
விளையாட்டு

ஆசியப் போட்டி: வீரர்கள் ஜூலை 26-ல் தேர்வு

இளைஞர்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 26-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.

Updated On : 22 ஜூலை, 2013 at 1:10 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

இளைஞர்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 26-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.

இதற்கான தகுதிப் போட்டிகளை இந்திய தடகள சம்மேளனம் நடத்துகிறது. இது, கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இளைஞர்களுக்கான ஆசியப் போட்டி சீனாவின் நன்ஜிங் நகரில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

இதில் பங்கேற்கும் வகையில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 30 (18 வயதுக்கு உட்பட்டோர்) வீரர், வீராங்கனைகள், திருவனந்தபுரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களில் 12 பேர், உக்ரைனில் நடைபெற உள்ள இளைஞர்களுக்கான உலக விளையாட்டுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.