கார்லோ ஓபன்: திவிஜ்-புரவ் ஜோடி சாம்பியன்
இந்தியாவின் டென்னிஸ் வீரர்களான திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி, கார்லோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்றது.
இந்தியாவின் டென்னிஸ் வீரர்களான திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி, கார்லோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்றது.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்த ஜோடி பெற்ற முதல் ஏடிபி பட்டம் இதுவாகும்.
கொலம்பியாவின் போகோடா நகரில் நடைபெற்ற இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி 7-6 (4), 7-6 (3) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரோஜர் வேசன்-நெதர்லாந்தின் இகோர் சிஜிஸ்லிங் ஜோடியை வீழ்த்தியது.
Advertisement
Advertisement
இதன் மூலம் இந்திய ஜோடிக்கு சுமார் ரூ. 3.7 கோடி ரொக்கம் பரிசளிக்கப்பட்டது. இருவரும் தலா 250 ஏடிபி தர புள்ளிகளைப் பெற்றனர். இதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் காண்பர்.
திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி நீண்ட நாள்களுக்குப் பிறகு விளையாடிய முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.