முகப்பு
விளையாட்டு

கார்லோ ஓபன்: திவிஜ்-புரவ் ஜோடி சாம்பியன்

இந்தியாவின் டென்னிஸ் வீரர்களான திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி, கார்லோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்றது.

Updated On : 22 ஜூலை, 2013 at 1:10 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

இந்தியாவின் டென்னிஸ் வீரர்களான திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி, கார்லோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்றது.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்த ஜோடி பெற்ற முதல் ஏடிபி பட்டம் இதுவாகும்.

கொலம்பியாவின் போகோடா நகரில் நடைபெற்ற இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி 7-6 (4), 7-6 (3) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரோஜர் வேசன்-நெதர்லாந்தின் இகோர் சிஜிஸ்லிங் ஜோடியை வீழ்த்தியது.

Advertisement

இதன் மூலம் இந்திய ஜோடிக்கு சுமார் ரூ. 3.7 கோடி ரொக்கம் பரிசளிக்கப்பட்டது. இருவரும் தலா 250 ஏடிபி தர புள்ளிகளைப் பெற்றனர். இதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் காண்பர்.

திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி நீண்ட நாள்களுக்குப் பிறகு விளையாடிய முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.