ஊக்கமருந்து சோதனைக்கு மறுப்பு: மல்யுத்த வீரர்கள் 6 பேரின் பதக்கம் பறிப்பு
தேசிய ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற 6 பேர் ஊக்கமருந்து சோதனைக்கு சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை தர மறுத்ததால், இந்திய மல்யுத்த சம்மேளனம் அவர்களின் பதக்கங்களை பறித்துள்ளது.
தேசிய ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற 6 பேர் ஊக்கமருந்து சோதனைக்கு சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை தர மறுத்ததால், இந்திய மல்யுத்த சம்மேளனம் அவர்களின் பதக்கங்களை பறித்துள்ளது.
சண்டீகரில் கடந்த 9 முதல் 12-ம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற ராகுல் பால் (84 கிலோ எடைப் பிரிவு), அமித் (74 கிலோ), சுநீல் குமார் (120 கிலோ) சந்தீப் (60 கிலோ), அனூப் (84 கிலோ), மஞ்ஜீத் (84 கிலோ) ஆகியோர் போட்டி முடிந்த பிறகு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பிடம் சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை தர மறுத்துள்ளனர். இதையடுத்து மல்யுத்த சம்மேளனம் பதக்கங்களை பறித்துள்ளது.
இது தொடர்பாக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதக்கம் வென்றவர்கள் சிறுநீர் உள்ளிட்ட மாதிரிரிகளை வழங்காமல் உடனடியாக மைதானத்தில் இருந்து புறப்பட்டு சென்றது துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக சம்மேளனத் தலைவருடன் ஆலோசனை நடத்திய பிறகு சம்பந்தப்பட்ட வீரர்களிடம் இருந்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீரர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும். அந்த விசாரணை முடிந்த பிறகு இறுதி முடிவெடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளது.