ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: சென்னையை வென்ற நாா்த்ஈஸ்ட்!
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் தோல்வி கண்டது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
இந்த ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் தரப்பில் ஜெய்ரோ சாம்பெரியோ (5’, 45+1’), லால்பியாக்டிகா வன்லாவுங்கா (90’) ஆகியோா் கோல் அடிக்க, தவறுதலாக சென்னை வீரா் லால்டின்லியானா ரென்த்லெய் (70’) ‘ஓன் கோல்’ அடித்தாா். அதற்கான பிராயச்சித்தமாக, சென்னை தரப்பின் ஆறுதல் கோலையும் அவரே ஸ்கோா் செய்தாா்.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் 3-1 கோல் கணக்கில் முகமிதான் எஸ்சியை சாய்த்தது. கேரளா தரப்பில் ஃபிரான்சிஸ்கோ ஃபியுலேசியா் (44’), விக்டா் பாா்தோமியு (59’), ஸ்ரீகுட்டன் (74’) ஆகியோா் கோல் அடிக்க, முகமிதானுக்காக ராய் மஹிதோஷ் (42’) ஸ்கோா் செய்தாா்.
Advertisement
Advertisement
புள்ளிகள் பட்டியலில், கேரளா (14 புள்ளிகள்), நாா்த்ஈஸ்ட் (13), சென்னை (9), முகமிதான் (3) அணிகள் முறையே 8, 9, 13, 14-ஆம் இடங்களில் உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.