முகப்பு
ஸ்பெஷல்

கேப்டன் கம்பீர் அரைசதம்: டேர்டெவில்ஸ் 166 ரன்கள் குவிப்பு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான 2-ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 8 ஏப்ரல் 2018, 5:50 pm IST
பகிர்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான 2-ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 166 ரன்கள் எடுத்துள்ளது.

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 7-ஆம் தேதி) கோலாகலமாகத் தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுடன் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி த்ரில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், 2-ஆவது லீக் ஆட்டம் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையில் பஞ்சாப்பில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Advertisement

Advertisement

இதையடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் கௌதம் கம்பீர் 55 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பண்ட் 28, கிறிஸ் மோரிஸ் 27 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் தரப்பில் மோஹித் ஷர்மா, முஜீப்-உர்-ரஹ்மான். ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments