முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தமிழ்ப் பண்பு மாறாத ம.பொ.சி.

சென்னை பல்கலைக்கழகத்திற்கு செனட் உறுப்பினராக ம.பொ.சி. தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

Updated On : 21 மார்ச், 2013 at 5:05 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM

சென்னை பல்கலைக்கழகத்திற்கு செனட் உறுப்பினராக ம.பொ.சி. தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒரு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. உறுப்பினர் என்ற முறையில் ம.பொ.சி. அந்த விழாவுக்குச் செல்ல வேண்டும். அந்த விழாவுக்குச் செல்லும்போது பட்டதாரிகள் அணியும் கருப்பு அங்கி அணிந்து கொள்ள வேண்டும்.

நண்பரான செங்கல்வராயனிடம் தம்முடைய தர்மசங்கடத்தைக் கூறினார். ம.பொ.சியை கவலைப்பட வேண்டாம் என்று அபயமளித்தார் செங்கல்வராயன்.

உடனே எட்டுமுழம் வேஷ்டியைக் கொண்டு ம.பொ.சி. பஞ்சகச்சம் கட்டிவிட்டார். கருப்பு கவுனையும் மாட்டினார். தோற்றம் மாறியது. தம்முடைய அந்த தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்தார் ம.பொ.சி.

Advertisement

தமிழ் பண்புக்கோ பழக்க,வழக்கத்துக்கோ சற்றும் ஒத்துவராத இந்த கறும்பூத உடையை நான் அணிய விரும்பவில்லை. செனட்டர் பதவியை பல்கலைக்கழகத்தினர் பறித்துக் கொண்டால் கூட நான் கவலைப்படப்போவதில்லை...'' என்று கூறிய ம.பொ.சி அதற்குப் பிறகு செனட் கூட்டம் எதிலும் கலந்துகொள்ளவேஇல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.