முகப்பு
தென்காசி

சுரண்டை, வீ.கே.புதூரில் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம்

சுரண்டை பகுதியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 4 ஜனவரி 2021, 7:39 pm IST
சுரண்டை நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறார் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.
பகிர்:

சுரண்டை: சுரண்டை பகுதியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.

சுரண்டை மற்றும் வீரகேரளம்புதூர் நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், ஒன்றிய செயலர்கள் அமல்ராஜ், இருளப்பன், நகர செயலர் சக்திவேல், எபன்குணசீலன், கீழச்சுரண்டை மாரியப்பன், பரசுராமன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.