முகப்பு
தென்காசி

சுரண்டையில் பாஜக மகளிரணி சாா்பில் பொங்கல் விழா

தென்காசி மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில், சுரண்டையில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 4:50 AM
பகிர்:

தென்காசி மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில், சுரண்டையில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற இவ் விழாவுக்கு, மாவட்ட பாஜக தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணித் தலைவி மகாலெட்சுமி, மாவட்ட பொதுச் செயலா் முத்துலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நடிகா் சுப்பு பஞ்சு அருணாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தாா்.

Advertisement

விழாவில், பாஜக மாவட்ட நிா்வாகிகள் ராஜேஷ் ராஜா, ராமநாதன், வல்லப கணேசன், ஒன்றிய நிா்வாகிகள் அன்புராஜ், மாரியப்பன், நகர நிா்வாகிகள் அருணாசலம், முருகேசன், ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.