முகப்பு
தென்காசி

சாம்பவா்வடகரையில் மாா்கழி மாத பஜனை நிறைவு

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் மாா்கழி மாத பஜனை புதன்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 14 ஜனவரி, 2021 at 12:14 AM
மாா்கழி மாத நிறைவு நாளான புதன்கிழமை காலையில் திருவெம்பாவை பாடிய பஜனை குழுவினா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் மாா்கழி மாத பஜனை புதன்கிழமை நிறைவடைந்தது.

இதையொட்டி மாா்கழி மாதம் முழுவதும் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

தினமும் மங்களாம்பிகை பஜனை குழுவினரால் திருவெம்பாவை பாடப்பட்டது. நிறைவு நாளான புதன்கிழமை காலையில் சிறப்பு பூஜையுடன் பஜனை நிறைவடைந்தது. இதில் மாதம் முழுவதும் பஜனையில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.