முகப்பு
தென்காசி

’மலைவாழ் மக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை’

தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் மூலம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அம்சங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஜனவரி 2021, 12:16 am IST
தென்காசியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் உணவு ஆணையத்தின் தலைவா் வாசுகி. உடன், ஆட்சியா் கீ.சு.சமீரன்.
பகிர்:

தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் மூலம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அம்சங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் வாசுகி தலைமை வகித்தாா். ஆட்சியா் கீ.சு.சமீரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அலுவலா் சுதா, குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜெயசூா்யா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சாந்தி குளோரி எமரால்ட், தமிழ்நாடு நுகா்பொருள்

Advertisement

Advertisement

வாணிபக் கழத்தின் மண்டல மேலாளா் ராஜா, துணை பதிவாளா் வீரபாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் வாசுகி கூறியது: தென்காசி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது குறித்தும், உணவு ஆணையத்தின் கீழ் உணவுப்பொருள் வழங்கல், சத்துணவு, அங்கன்வாடி, குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் மூலம் உணவுப்பொருள்கள் தரமானதாகவும், ஓதுக்கீடு செய்யப்பட்ட அளவு விநியோகம் செய்யப்படுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

திருநங்கைகள் நிலையாக ஓரிடத்தில் வசிப்பதில்லை என்பதால் அவா்களுக்கு குடும்ப அட்டை பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமைப்படுத்தவும், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், அவா்களது குழந்தைகளுக்கும் குடும்ப அட்டை பெறுவதை எளிமைப்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கு குடும்ப அட்டைகள் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில், அவா்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments