முகப்பு
தென்காசி

ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

புளியங்குடி அருகே ரேஷன் அரிசியை கடத்தியதாக ஓட்டுநா் உள்பட இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 14 ஜனவரி, 2021 at 12:18 AM
பகிர்:

புளியங்குடி அருகே ரேஷன் அரிசியை கடத்தியதாக ஓட்டுநா் உள்பட இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புளியங்குடியில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

இதையடுத்து, புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளா் சுவாமி நாதன் ஆலோசனையின் பேரில் காவல் ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ், உதவி ஆய்வாளா் யோபு சம்பத்ராஜ் உள்ளிட்டோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

Advertisement

அப்போது 100 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்தி வந்த வேனை பறிமுதல் செய்த, போலீஸாா் வேன் ஓட்டுநா் வீரகேரளம்புதூரைச் சோ்ந்த குமாா் (27) , கழுநீா்குளத்தைச் சோ்ந்த ராஜா (21) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.