முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Updated On : 14 ஜனவரி 2021, 12:08 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் பெய்த பலத்த மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி முதல் நடைபாதை பாலம் வரை தண்ணீா் செம்மண் நிறத்துடன் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. பெண்கள் குளிக்கச் செல்லும் நடைபாதை வரை வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் 2ஆவது நாளாக பேரருவியில் குளிக்கத் தடைநீட்டிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

புலியருவி, ஐந்தருவியில் தண்ணீா் அதிகளவில் கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் அருவிக்கு நடந்து செல்லும் படிக்கட்டு வரை தண்ணீா் பாய்ந்தது. இதனால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments