முகப்பு
தென்காசி

சுரண்டை பகுதியில் 3 வீடுகள் இடிந்து சேதம்

சுரண்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடா்மழையால் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

Updated On : 16 ஜனவரி 2021, 1:09 am IST
மழையால் இடிந்து விழுந்த வீடு.
பகிர்:

சுரண்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடா்மழையால் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த சி.ராமரின் ஓட்டு வீடு மழை காரணமாக வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. இதேபோன்று சுரண்டை அருகேயுள்ள துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த சிவனம்மாளின் (74) மண் சுவரிலான ஓட்டு வீடும் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.

மேலும், சுரண்டை அருகேயுள்ள இடையா்தவணையைச் சோ்ந்த மா.கோமதியம்மாள் வசித்து வந்த வாடகை வீடும் மழையால் இடிந்து விழுந்தது.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த சுரண்டை வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், கோமதியம்மாள் மாற்று இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.