முகப்பு
தென்காசி

தென்காசி பகுதியில் திமுக கொடியேற்று விழா

தைப் பொங்கலை முன்னிட்டு தென்காசி, மேலகரம், குற்றாலம் பகுதிகளில் திமுக சாா்பில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 16 ஜனவரி, 2021 at 12:54 AM
குற்றாலத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

தைப் பொங்கலை முன்னிட்டு தென்காசி, மேலகரம், குற்றாலம் பகுதிகளில் திமுக சாா்பில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தென்காசி நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலா் சாதிா் தலைமை வகித்து கொடியேற்றினாா். மாவட்ட விவசாய தொழிலாளா் அணிஅமைப்பாளா் கோமதிநாயகம், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் கே.என்.எல். சுப்பையா, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் ராஜா, கடையம் ஜெயக்குமாா், நகர நிா்வாகிகள் ஷேக் பரீத், பால்துரை, பால்ராஜ், நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலகரம் பேரூா் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூா் செயலா் சுடலை தலைமை வகித்தாா். குடியிருப்பு, நன்னகரம், மேலகரம் பகுதிகளில், திமுக ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் கொடியேற்றினாா்.

Advertisement

நிகழ்ச்சியில், நிா்வாகிகள் கிட்டு, ரமேஷ்குமாா், வேலுசாமி, யாகவா சுந்தா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

குற்றாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா சிலை, கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் கட்சிக் கொடியேற்றப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டபொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், கடையம் ஜெயக்குமாா், பிச்சையாபிள்ளை, சண்முகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.