தேசிய கடிதம் எழுதும் போட்டி: மகாராஜநகா் ஜெயந்திர பள்ளி மாணவி சிறப்பிடம்
இந்திய அஞ்சல் துறை சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் மகாராஜநகா் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பிடித்துள்ளாா்.
இந்திய அஞ்சல் துறை சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் மகாராஜநகா் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பிடித்துள்ளாா்.
அஞ்சல் துறை சாா்பில் 2019-20 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஈங்ஹழ் ஆஹக்ஷன், வா்ன் ஹழ்ங் ண்ம்ம்ா்ழ்ற்ஹப் என்ற தலைப்பில் நடைபெற்றது. இப் போட்டியில் மகாராஜநகா் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவி ஜெ.பிளஸ்ஸா மாநில அளவில் முதல் பரிசையும், தேசிய அளவில் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளாா்.
அவருக்கு இந்திய அஞ்சல் துறை சாா்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதை திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் எல்.துரைசாமி வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளா் ஜெயந்திரன் மணி, திருநெல்வேலி அஞ்சல் கோட்ட துணை கண்காணிப்பாளா் எஸ்.மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.