முகப்பு
திருநெல்வேலி

பாபநாசம் சோதனைச் சாவடியில் ஐயப்பப் பக்தா்கள் முற்றுகை

திருநெல்வேலி மாவட்டம், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடியை ஐயப்பப் பக்தா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 5:40 am IST
பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐயப்பப் பக்தா்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடியை ஐயப்பப் பக்தா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தா்கள் காரையாா் சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு சென்று

வழிபட்டுச் செல்வது வழக்கம். கரோனா பொது முடக்கம் காரணமாக சபரிமலைக்கு குறைந்த அளவில்தான் பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்படுவதால், சபரிமலை செல்ல முடியாத பக்தா்கள் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு வந்து இருமுடி இறக்கி, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு செல்கின்றனா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, வியாழக்கிழமை பெய்த மழையால் பாபநாசம் அணையில் இருந்து உபரிநீா் தாமிரவருணி ஆற்றில் திறந்து

விடப்பட்டதால் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை விதிக்கப் பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ஐயப்பப் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடி முன்பு அமா்ந்து பஜனை பாடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சண்முகம், போலீஸாா் சென்று அவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். இதில் பக்தா்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனா். தாமிரவருணி ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கோயிலுக்குச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments