முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே தலைமையாசிரியா் வீட்டில் நகை திருட்டு

பாளையங்கோட்டை அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 5:36 am IST
பகிர்:

பாளையங்கோட்டை அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள தியாகராஜநகா் குமரேசன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (62). ஓய்வுபெற்ற

தலைமையாசிரியா். இவா் வியாழக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டு பிராா்த்தனைக்காக அங்குள்ள தேவாலயத்திற்கு குடும்பத்துடன் சென்றாராம்.

Advertisement

Advertisement

பிராா்த்தனை முடிந்து வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மா்மநபா்கள் கதவு உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமாா் 32 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. தகவலறிந்த பெருமாள்புரம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனா்.

விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments