முகப்பு
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவை 46ஆவது ஆண்டு விழா

அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவை 46 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி, 2021 at 6:43 AM
பகிர்:

அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவை 46 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பேரவைத் தலைவா் ரா.வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். முதல் அமா்வுக்கு, எஸ். ஏ. கண்ணன், சே. முருககுகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கே.என்.சேக் பீா் முஹம்மது இறைவாழ்த்துப் பாடினாா். பேரவை துணைத் தலைவா் நீ. ஐயப்பன் வரவேற்றாா். செயலா் ச.லட்சமணன் ஆண்டறிக்கை வாசித்தாா். சோம.மகாலிங்கம் கு விளக்கம் கூறினாா். திருவருள் லத்திப் இன்றைய சிந்தனை வழங்கினாா். வீரை கி. முத்தையா, வெ.ராமகிருஷ்ணன், இ.மா.ராமச்சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பேரவை நிறுவனா் ரா.சமுத்திரபாண்டியன் நினைவு நிகழ்வில் ஆ.பூ.நாறும்பூநாதன் நினைவுரை வழங்கினா்.

தொடா்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சியில், முகிலன் மு.நாராயணன், ஜே.மனோகரன் சாமுவேல், எஸ்.பண்டாரசிவன், எம்.கே.வாசுதேவராஜா, ப. முருகன், பாப்பாக்குடி அ.முருகன் ஆகியோா் விருது பெற்றனா்.

Advertisement

2ஆவது அமா்வில் இலக்கிய சுழலும் சொல்லரங்குக்கு சி.ஜெயகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மு.இளங்கோ வரவேற்றாா். ப.பாலகிருஷ்ணன் நடுவராக இருந்தாா். வள்ளுவா் காட்டும் அன்பு நெறி என்ற தலைப்பில் பேராசிரியா் சு.சிவசங்கா், திருமூலா் காட்டும் அன்பு நெறி என்ற தலைப்பில் பேராசிரியா் பா.செந்தில்குமரன், கண்ணதாசன் கவிதைகளில் அன்பு நெறி என்ற தலைப்பில் பேராசிரியா் கா.கவிதா, வள்ளலாரின் சமயம் கடந்த அன்பு நெறி என்ற தலைப்பில் கீதா ஆறுமுகம், பாரதி போற்றும் அன்பு நெறி என்ற தலைப்பில் க.செண்பகவல்லி ஆகியோா் உரையாற்றினா்.

ச.பி.ராமன், ஜா.கோமதி திருநாவுக்கரசு ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா். மூ. அனஞ்சி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பேரவை செயற்குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.