முகப்பு
திருவள்ளூர்

ஆரணியில் இலவச கம்ப்யூட்டர், தையல் பயிற்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணியில் உள்ள காணியப்பா சமுதாயக் கல்லூரியில் இலவச கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Updated On : 2 மே, 2013 at 12:25 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணியில் உள்ள காணியப்பா சமுதாயக் கல்லூரியில் இலவச கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மகளிர் குழுக்களைச் சேர்ந்தவர்கள், வேலையில்லா இளைஞர்கள், கல்வியைத் தொடர முடியாமல் இடையில் நின்ற மாணவ, மாணவிகளுக்கு இப்பயிற்சிகள் மத்திய அரசின் வேலைவாய்ப்பு துறையின் கீழ், இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

தையல் பயிற்சிக்கு 5-ஆம் வகுப்பு படிப்பும், கம்ப்யூட்டர் பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு படிப்பும் தேவை. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் ஆரணி, இருக்கம் தெருவில் உள்ள காணியப்பா சமுதாயக் கல்லூரிக்கு தங்கள் குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ், 3 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும். பயிற்சிக் காலத்தில் பயணப்படி மற்றும் ஊக்கத் தொகை ஏதும் நிர்வாகத்தால் வழங்கப்பட மாட்டாது. பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

Advertisement

இது தொடர்பாக மேலும் தகவல் அறிய விரும்புவோர், ஆரணி காணியப்பா சமுதாயக் கல்லூரியை 044-27927493, 7708781075, 9789446438, 8056524887, 8056548883 ஆகிய போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.